நெல்லையில் 4 அல்-உம்மாவினர் மீண்டும் கைது

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வந்திருந்த அல்-உம்மா இயக்கத்தைச் சேர்ந்த 4 பேர், ஒரு வியாபாரியிடம் பணம்பறிக்க முயன்றதால், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலியைச் சேர்ந்த ஜாபர் அலி, சலி, ஷெக் ஹயாத் மற்றும் மங்கா பஷீர் ஆகிய 4 பேரும், தடைசெய்யப்பட்ட அல்-உம்மா இயக்கத்தின் உறுப்பினர்கள்.

இவர்கள் அந்தப் பகுதியில் உள்ள இந்துக் கொயில்களில் சாமி சிலைகளை உடைத்தும், அதன் புனிதத் தன்மைக்குகளங்கம் விளைக்கும் செயலில் ஈடுபட்டதாலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

பிறகு இவர்கள் 4 பேருக்கும் நிபந்தனைகளின் அடிப்படிடையில் ஜாமீன் வழங்கப்பட்டது.

இதையடுத்து வெளியில் வந்த இவர்கள், ஒரு வியாபாரியிடம் பணத்தை பறித்தாகக் குற்றம் சாட்டப்பட்டார்கள்.மேலும் சில மதத் தலைவர்களைக் கொல்லவும் திட்டமிட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்தக் காரணங்களுக்காகவும், இவர்கள் அனைவரும் ஜாமீன் நிபந்தனைகளை மீறியதாலும் மீண்டும் கைதுசெய்யப்பட்டனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களை போலீசார் பறித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+