வெறும் கானல் நீர் என்கிறார் வைகோ
சென்னை:
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக பட்ஜெட், தெளிந்த நீரோடை அல்ல, வெறும் கானல் நீர்தான் என்றுமதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
சாமானிய மக்கள் மீது வரிச்சுமையை அதிகரித்து, அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் பட்ஜெட்இது. இவ்வளவு பெரிய வரிச்சுமையை தாங்கும் சக்தி மக்களுக்கு இல்லை என்பது தான் உண்மை.
ஆனால் திருமுல்லைவாயில் தொழிற்பேட்டை, மீனவர் வீட்டு வசதித் திட்டம், பான் மசாலா போன்றவற்றிற்கு தடைமற்றும் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை ஆகியவை பாராட்டத்தக்க திட்டங்களாகும்.
இருப்பினும் இந்த பட்ஜெட்டில் துல்லியமான தொலைநோக்கு பார்வை இல்லை. வளர்ச்சித் திட்டங்கள், குடிநீர்ப்பிரச்சனையைத் தீர்க்கக் கூடிய உடனடித் திட்டங்கள் கரும்பு விவசாயிகளின் பிரச்சனைகள் ஆகியவற்றைப் பற்றிஎதுவும் குறிப்பிடப்படவில்லை.
மொத்தத்தில், இந்த பட்ஜெட் நீரோடை அல்ல, வெறும் காணல் நீர் தான் என்றார் வைகோ.