For Quick Alerts
For Daily Alerts
Just In
ஆந்திராவில் கண்ணிவெடியில் சிக்கி 10 போலீசார் பலி
ஹைதராபாத்:
ஆந்திராவில் இன்று காலை நக்சலைட்டுகள் வைத்திருந்த சக்தி வாய்ந்த நிலக்கண்ணி வெடியில் சிக்கி, 10 போலீசார்பலியாயினர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
அப்போது, சக்தி வாய்ந்த நிலக்கண்ணி வெடியை நக்சலைட்டுகள் வெடிக்கச் செய்தனர். இவ்விபத்தில், அந்தவாகனத்தில் சென்ற டிரைவர் உள்பட 10 போலீசாரும் அந்த இடத்திலேயே உடல் சிதறி இறந்தனர்.
இதே விபத்தில், அடையாளம் தெரியாத வேறு 2 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆந்திர மாநிலத்தில் மக்கள் போர்க் குழுவைச் சேர்ந்த நக்சலைட்டுகளின் கண்ணி வெடிக்கு, இதுவரை ஏராளமானபோலீசார் பலியாகியுள்ளனர்.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]