சென்னையில் 3 போலீசார் ஒரே நாளில் பலி
சென்னை:
சென்னையில் ஒரே நாளில் வெவ்வேறு சம்பவங்களில் 3 போலீசார் உயிரிழந்தனர்.
உடனடியாக இவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சைபலனின்றி அவர் உயிரிழந்தார்.
சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த பிரசன்னகுமார் (வயது 30) மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை செய்யும்போலீசாகப் பணியாற்றி வந்தார்.
சனிக்கிழமை சென்னை சேத்துப்பட்டு ரயில்வே ஸ்டேஷன் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அந்தவழியாக வந்த மின்சார ரயில் மோதி பிரசன்னகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை திருவொற்றியூர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் பொய்யாது (வயது 36). இவர் சேத்துப்பட்டுகுற்றப்பிரிவு போலீசாராகப் பணிபுரிந்து வந்தார்.
பொய்யாது பல பெண்களுடனும் தவறான உறவு கொண்டிருந்தார். இது தவிர இவர் குடிப்பழக்கத்துக்கும்அடிமையானவர். இதன் காரணமாக பொய்யாதுக்கும், அவரது மனைவி விசாலத்திற்கும் அடிக்கடி தகராறு இருந்துவந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு அதிகமாக குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்திருக்கிறார் பொய்யாது.இதனால் கோபமடைந்த விசாலம் 3 பெண் குழந்தைகளுடனும் பக்கத்து வீட்டுக்குச் சென்று படுத்துக் கொண்டுவிட்டார்.
இந்நிலையில் சமையலறைக்கு சென்று மண்ணெண்ணையை உடல் மீது ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார் பொய்யாது.












Click it and Unblock the Notifications