அம்மா, எங்கள் கைகளை அவிழ்த்து விடுங்கள்...அதிமுக எம்.எல்.ஏவின் மனோகரா டயலாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டி வருமே என்ற பயத்தால் திமுகவினர் சட்டசபைக்கு வெளியேயும்,உள்ளேயும் கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று சட்டசபையில் நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தின்போதுஅதிமுக உறுப்பினர் சுந்தரம் பேசினார்.

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் திங்கள்கிழமை துவங்கியது. அதிமுக உறுப்பினர் சுந்தரம் விவாதத்தில்கலந்து கொண்டு, "சிரித்துக் கொண்டே சிறை செல்வோம் என்று தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்துப்போராட்டம் நடத்தியவர்கள் எங்களைப் பார்த்துப் பயப்படுவது ஏன்?

அவர்கள் மீது மேம்பாலங்கள் கட்டியது தொடர்பாக ஒரு வழக்குதான் தொடரப்பட்டுள்ளது. இன்னும் ஓராயிரம்வழக்குகள் வரப் போகிறதே. அதற்குள் இப்படிப் பயப்படுவதேன்?

காலம் பூராவும் சிறையில் இருக்க வேண்டி வருமே என்ற பயத்தால்தான் அவர்கள் சட்டசபையின் உள்ளேயும்,வெளியேயும் கலவரத்தைத் தூண்டி வருகிறார்கள்.

அம்மா, எங்கள் கைகளை கட்டி விட்டீர்களே. முதலில் அதை அவிழ்த்து விடுங்கள்.

அதன் பிறகு பாருங்கள். உங்களது (ஜெயலலிதாவின்) புகழுக்கு குந்தகம் ஏற்பட்டால் எங்கள் எம்.எல்.ஏ.பதவியையே துறந்து விடுவோம்.

புரட்சித் தலைவரிடம் அரசியல் கற்றவர் எங்கள் புரட்சித் தலைவி. இதுபோன்ற சிறு நரிகளுக்கா அவர்அஞ்சுவார்? எரிமலை போன்றவர் எங்கள் அம்மா. அந்த எரிமலை மீது ஏற முயன்றால் சாம்பலாகி விடுவீர்கள்என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+