மதுரையில் தீப்பொறி ஆறுமுகம் வீடு மீது கடும் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகத்தின் வீடு நேற்று நள்ளிரவு தாக்கப்பட்டது.

கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன் திமுக விலிருந்து அதிமுகக்கு வந்தவர் தீப்பொறி ஆறுமுகம். திமுகவில் இருந்தபோது எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுக தலைவர்களைக் கடுமையாகத் தாக்கிப் பேசுவதில்இவருக்கு ஈடு இணை யாரும் இருந்ததில்லை.

இந்நிலையில் திமுகவில் தனது உழைப்பிற்கு மதிப்பில்லை என்று கூறி அதிமுகவில் வந்து இணைந்தார்.

பிறகு அதிமுகவில் தலைமைக் கழகப் பேச்சாளர் ஆக நியமிக்கப்பட்டார். இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதிமற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை மேடைக்குமேடை மிகக் கடுமையாக, ஆபாசமான வார்த்தைகளால்தாக்கிப் பேசி வருகிறார். இதற்கிடையில் கடந்த நேற்று (திங்கள்கிழமை) ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காகஇராஜபாளையம் சென்றுவிட்டார்.

நேற்று நள்ளிரவு 1 மணியளவில் மதுரை பைக்காராவில் உள்ள இவர வீட்டிற்கு சிலர் உருட்டுக் கட்டைகளுடன்வந்துள்ளனர். அவர்கள் ஆறுமுகத்தின் வீட்டுக் கதவைத் தட்டி, அங்கிருந்த அவரது மனைவி சங்கர வடிவு மற்றும்அவரது மருமகள் மகாலெட்சுமி ஆகியோரை மிரட்டியிருக்கிறார்கள்.

பிறகு வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கியதுடன் அவற்றிற்கு தீயும் வைத்துவிட்டுச்சென்றுள்ளனர். இதுகுறித்து தீப்பொறி ஆறுமுகம் ஆணடாள்புரம் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து வீட்டைத் தாக்கியவர்களைத் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+