பொய்ப் பிரச்சாரத்தை கருணாநிதி நிறுத்துவது நல்லது- ஜெ.
சென்னை:
கருணாநிதி பொய்பிரச்சாரம் செய்வதை நிறுத்துவதே தமிழக மக்களுக்கு அவர் செய்யும் பேருதவியாக இருக்கும்என்று முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் கூறினார்.
அதிமுக அரசு தமிழகத்தில் மேற்கொள்ள உள்ள பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை எடுத்துக் கூறி மத்தியஅரசிடம் இருந்து போதுமான நிதி உதவியைப் பெற்றது. அப்போது தமிழகத்தில் கடந்த ஆட்சியில் பலதுறைகளிலும் ஏற்பட்டுள்ள சரிவுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைச் சீர் செய்வதற்காகவே இந்த அளவு நிதிஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தில் பல சீர்திருத்தங்களை செய்யப்பட்டதாகவும். இதனால் தமிழகம் பலதுறைகளிலும் சிறந்து விளங்குகிறது என்றும், இதை மத்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவரேபாராட்டியிருக்கிறார் என்றும், அதனால் தான் தமிழக அரசுக்கு கேட்டதை விட இந்த ஆண்டு மத்திய அரசுஅதிகமாக நிதி ஒதுக்கியுள்ளது என்று கருணாநிதி கூறிவருகிறார்.
இவ்வாறு தன்னுடைய பரிந்துரையினால் தான் மத்திய அரசு நிதி ஒதுக்கியதாக கருணாநிதி பொய்ப்பிரசாரம் செய்துமக்களை ஏமாற்றும் வேலையைக் கைவிட வேண்டும்.
உண்மையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குறைகளைத் தான் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் பட்டியலிட்டார்.
இதை கருணாநிதி தான் செய்து விட்ட சாதனையாக மக்கள் மத்தியில் பறைசாட்டிக் கொண்டிருக்கிறார்.
இனிமேலாவது அவர் தனது பொய்பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்வது, தமிழக மக்களுக்கு அவர் செய்யும்பேருதவியாக இருக்கும்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.












Click it and Unblock the Notifications