மதுரை, தஞ்சைக்கு சுற்றுலா கழகத்தின் சொகுசுப் பேருந்துகள்
சென்னை:
சென்னை நகரிலிருந்து தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களான மதுரை, தஞ்சாவூர், திருச்சிக்கு தினசரிசொகுசுப் பேருந்துகளை இயக்க தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் முடிவுசெய்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் நீண்ட காலமாக சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய சுற்றுலாத்தலங்களுக்குசொகுசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதையேற்று புதன்கிழமை முதல் இந்தமூன்று ஊர்களுக்கும் இரவு நேர சொகுசுப் பேருந்து சேவை துவக்கப்படுகிறது.
தினசரி இரவு 8.30 மணிக்கு இந்தப் பேருந்துகள் மதுரை, திருச்சி, தஞ்சைக்குப் புறப்பட்டுச் செல்லும். அதேநேரத்தில் மறு மார்க்கத்தில் சென்னைக்கு சொகுசுப் பேருந்துகள் புறப்பட்டு சென்னைக்கு வந்து சேரும்.
சென்னை-மதுரைக்கு ரூ.220 கட்டணம் வசூலிக்கப்படும். சென்னை-திருச்சிக்கு ரூ.170ம் சென்னை-தஞ்சைக்குரூ.180ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.
டிக்கெட் முன்பதிவு மற்றும் பிற தகவல்களை அறிய சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சை நகர்களிலுள்ளஹோட்டல் தமிழ்நாடு வளாகத்தில் உள்ள சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலகத்தை நாட வேண்டும் என்றுஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.