"டென்மார்க்"கிடம் பிளேடு போட்ட "சென்னை"

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு பெண் சென்னை பஸ்சில் பயணம் செய்தபோது அவரது கைப்பையை பிளேடுபோட்டு அதிலிருந்து பணம் உள்ளிட்ட பொருட்களை சிலர் பிக் பாக்கெட் அடித்துச் சென்றனர்.

டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர் மெதீனா. இவர் சென்னைக்கு வந்திருந்தார். சென்னை நகர பஸ்சில் பயணம்செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர் மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்தில் ஏறினார்.

பஸ் போய்க் கொண்டிருந்தபோது அவரது கைப்பையை சிலர் பிளேடு போட்டுக் கத்தரித்து பிக் பாக்கெட் அடித்துச்சென்றனர். பஸ்சை விட்டு இறங்கும்போதுதான் தனது பை கட் செய்யப்பட்டிருப்பது மெதீனாவுக்குத் தெரியவந்தது.

அந்த பையில் விலையுயர்ந்த காமிரா, கிரடிட் கார்டு, ரூ.4,000 பணம் ஆகியவை இருந்ததாக மெதீனாதெரிவித்தார். இதுகுறித்து அண்ணாநகர் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் மெதீனா புகார் கொடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+