பீகாரில் 6 தலித் மக்கள் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

பாட்னா:

பீகார் மாநிலம் பாட்னாவிற்கு அருகே உள்ள தாசாமி கிராமத்தில் ஜயானந்த யாதவின் தலைமையில் செயல்பட்டுவரும் நக்சலைட்டுகள், 3 குழந்தைகள் உட்பட 6 தலித் மக்களை நேற்று (புதன்கிழமை) இரவு சுட்டுக் கொலைசெய்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் ஐ.ஜி. நீல்மணி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த நக்சலைட்டுகள் தாசாமி கிரமாத்தில் நுழைந்து 6 தலித் மக்களை சுட்டுக்கொன்றனர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் (சி.ஆர்.பி.எஃப்). பீகார் ராணுவ போலீசாரும், பாட்னா மாவட்டபோலீசாரும் கொலை செய்தவர்களை தேடும் பணியில் ஈடுபட்டள்ளனர் .

கடந்த 6ம் தேதி காஹ்னியா கிராமத்தில் ஜயானநந்தனின் ஆதரவாளர்கள் 3 பேர் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட்அமைப்பினரால் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, புதன்கிழமை நடந்துள்ள இந்த கொடூரசம்பவம் நடத்தப்பட்டிருக்கக்கலாம் என்றார்.

ஜயானந்தன் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் காஹ்னியா கிராமத்தில் கடந்த 16ம் தேதி இரவுதான், 6 தலித்களை சுட்டுக்கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படுகொலை பீதியில் இருந்து மக்கள் மீளும் முன் நடந்துள்ள நேற்றைய சம்பவம் மக்களை பெரும்அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+