பீகாரில் 6 தலித் மக்கள் சுட்டுக் கொலை
பாட்னா:
பீகார் மாநிலம் பாட்னாவிற்கு அருகே உள்ள தாசாமி கிராமத்தில் ஜயானந்த யாதவின் தலைமையில் செயல்பட்டுவரும் நக்சலைட்டுகள், 3 குழந்தைகள் உட்பட 6 தலித் மக்களை நேற்று (புதன்கிழமை) இரவு சுட்டுக் கொலைசெய்துள்ளனர்.
பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த நக்சலைட்டுகள் தாசாமி கிரமாத்தில் நுழைந்து 6 தலித் மக்களை சுட்டுக்கொன்றனர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் (சி.ஆர்.பி.எஃப்). பீகார் ராணுவ போலீசாரும், பாட்னா மாவட்டபோலீசாரும் கொலை செய்தவர்களை தேடும் பணியில் ஈடுபட்டள்ளனர் .
கடந்த 6ம் தேதி காஹ்னியா கிராமத்தில் ஜயானநந்தனின் ஆதரவாளர்கள் 3 பேர் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட்அமைப்பினரால் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, புதன்கிழமை நடந்துள்ள இந்த கொடூரசம்பவம் நடத்தப்பட்டிருக்கக்கலாம் என்றார்.
ஜயானந்தன் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் காஹ்னியா கிராமத்தில் கடந்த 16ம் தேதி இரவுதான், 6 தலித்களை சுட்டுக்கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படுகொலை பீதியில் இருந்து மக்கள் மீளும் முன் நடந்துள்ள நேற்றைய சம்பவம் மக்களை பெரும்அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications