பஞ்சாலைத் தொழிலாளர்கள் ஸ்டிரைக் தற்காலிக வாபஸ்
சென்னை:
தமிழகத்தில் கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் மேற்கொண்டிருந்த வேலைநிறுத்தம்தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
"தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் இத்தொழில் முழுமையாகப்பாதிக்கப்பட்டது. நூற்பாலைகளும் கூட இதில் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், மில் தொழிலாளர்களின் பிரச்சனை குறித்து, மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்வர் ராஜாதலைமையில், சென்னையில் 28ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
அதுவரை போராட்டத்தை கைவிடுங்கள் என தொழிலாளர்களுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து,கோவையில் புதன்கிழமை போராட்டக் குழுப் பிரதிநதிகள் கூடிப் பேசினர்.
அப்போது, அமைச்சர் தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கு பெறுவது, அதுவரைவேலைநிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவது, பேச்சுவார்த்தையின்போது உடன்பாடு ஏற்படாவிட்டால்அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பது என முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications