வரிசைப்படி அப்பீல் மனுக்களை விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி
சென்னை:
ஜெயலலிதாவின் அப்பீல் மனுவுக்கு முன்னதாக தனது மனுவை விசாரிக்க வேண்டும் என்று கோரி கைதி ஒருவர்தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது, வெடிகுண்டு வழக்கு ஒன்றில் எனக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனைவழங்கியது பூந்தமல்லி கோர்ட். இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக நான் சிறையில் இருந்து வருகிறேன்.
என் மீதான தண்டனையை எதிர்த்து நான் செய்துள்ள அப்பீல் மனுதான், முதல்வர் ஜெயலலிதாவின் மனுவிற்குமுன்பு தாக்கல் செய்யப்பட்டது. எனவே வரிசைப்படி எனது மனுவைத்தான் முதலில் விாசரிக்க வேண்டும் என்றுகோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் வெங்கடாச்சல மூர்த்தி, சம்பத் ஆகியோர் முன்பு நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்குவந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
ஐகோர்ட் திருப்தி இருந்தால் மட்டுமே எந்த அப்பீல் மனுவையும் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்.இது பற்றி ஏற்கனவே "சரீன்" ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெளிவாகத் தீர்ப்புக் கூறியிருக்கிறது. எனவே இந்தமனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்கள்.












Click it and Unblock the Notifications