பட்டாதாரி ஆசிரியர் பணியில் சேர வயதுவரம்பு தளர்த்தப்படும்- தம்பிதுரை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் பி.எட், எம்.எட் படித்த 35 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளும் ஆசிரியர் பணிகளில் சேருவதற்கு வசதியாகதற்போதுள்ள விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை அமைச்சர் தம்பித்துரை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக எழுப்பப்பட்ட துணைக் கேள்விகளுக்கு அமைச்சர் தம்பித்துரை பதிலளிக்கையில், தற்போதுள்ள விதிமுறைப்படி35 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் பணியிடங்களில் சேரமுடியாது. இதனால் 35 வயதுக்கு மேற்பட்டபட்டதாரிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
எனவே 35 வயதுக்கு மேற்பட்டவர்களும் ஆசிரியர் பணிகளில் சேருவதற்கு வசதியாக தற்போதுள்ள விதிமுறைகளில் திருத்தம்கொண்டு வரப்படும். அவர்களுக்கும் ஆசிரியர் பணியில் சேர வாய்ப்பு அளிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications