ஈவ்-- டீசிங்கில் ஈடுபட்டால் அடி-உதை... நாகர்கோவில் டி.ஐ.ஜி எச்சரிக்கை
நாகர்கோவில்:
ஈவ் டீசிங்கில் ஈடுபட்டுப் பிடிபடுபவர்கள் பொதுமக்கள் மத்தியில் அடித்து, உதைத்து இழுத்து வரப்படுவார்கள்என்று நாகர்கோவில் சரக டி.ஐ.ஜி. ஜாங்கிட் எச்சரித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 40 ஈவ் டீசிங் வழக்குகள் பதிவாகியுள்ளன. ஈவ் டீசிங்கில் ஈடுபடுபவர்கள்கடுமையாக தண்டிக்கப்படுவர். இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஈவ்டீசிங்கில் ஈடுபட்டு கைது செய்யப்படுபவர்கள், பொதுமக்கள் மத்தியில், சாலையில் அடித்து, உதைத்து இழுத்துவரப்படுவர். இதன் மூலம் தவறு செய்ய நினைக்கும் பிறருக்கு எச்சரிக்கையாக இது அமையும் என்றார் ஜாங்கிட்.
இதற்கிடையே நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் பகுதியில் மாணவி அமுதா ஈவ் டீசிங்கிற்கு பலியானதைக்கண்டித்து திண்டுக்கல்லில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன மாநாடு நடந்தது. இதில்அமுதா சாவுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.












Click it and Unblock the Notifications