விநாயகர் ஊர்வலத்தை குலைக்க சதியா?
சென்னை:
சென்னை எழும்பூர் அருகே வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்ட வாலிபர் தீவிரவாத இயக்கத்தைச்சேர்ந்தவரா என்பது பற்றியும் இவர் விநாயகர் ஊர்வலத்தை குலைக்கும் சதித்திட்டத்துடன் வந்தாரா என்பதுபற்றியும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அவர் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது அதில் டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள்போன்றவெடிபொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வயர்கள், கத்தி, சுத்தியல் போன்ற பொருட்களும்இருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர்.
அவரிடம் விசாரணை செய்ததில் அவர் பெயர் ஆசாத் அலி என்பதும். அவர் விழுப்புரம் அருகேயுள்ளமாசிலாமணி பேட்டையைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. பின்னர் அவர் நீதீமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு,சிறையில் அடைக்கப்பட்டார்.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தனக்கு இநத் வெடி பொருட்களை கொடுத்தார்என்று விசாணையின் போது ஆசாத் தெரிவித்தார்.
ஆசாத்தை அவரின் பெற்றோர் இருக்குமிடத்துக்கு போலீசார் அழைத்துச் சென்ற போது, அவர்கள் கரூர்அருகேயுள்ள சிந்தாமணி பேட்டைக்கு சென்றது தெரிய வந்தது. சிந்தாமணி பேட்டை சென்று ஆசாத்தின்பெற்றோரை விசாரித்த போது, அவர்கள் ஆசாத் பொறுப்பின்றி சுற்றி வருவதாக புகார் கூறினர்.
ஆசாத் கூறியது போல் சீனிவாசன் என்ற நபரே இல்லை என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஆசாத்தொடர்ந்து தவறான தகவல்களையே கூறி வருவதால் அவர் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம்என்ற சந்தேகம் போலீசுக்கு வந்தது.
இந்நிலையில் ஆசாத்திடமிருந்து கைப்பற்ற வெடி பொருட்களை ஆய்வு செய்த வெடி பொருள் நிபுணர்கள், இந்தவெடிபொருட்கள் நாக்பூரில் தயாரிக்கப்பட்டிருப்பதும், இந்த வெடி பொருட்கள் ஒரு கட்டிடத்தையே தகர்க்கும்சக்தி வாய்ந்தவை என்றும் தெரிவித்தனர்.
வெடிபொருள் நிபுணர்களின் இந்த தகவல் ஆசாத் மேல் போலீசார் கொண்டிருந்த சந்தேகத்தை மேலும்வலுப்படுத்தியது. அவர் மீதான வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆசாத் அலி தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவராக இருக்கலாம். விநாயகர் ஊர்வலத்தை குலைக்கும் எண்ணத்துடன்அவர் சென்னைக்கு வந்திருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications