பாரபட்சிமின்றி நடந்து கொள்வேன்: காளிமுத்து
சென்னை:
எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க வேண்டும் என்பது என் எண்ணமில்லை என்று சட்டசபை சபாநாயகர் காளிமுத்துகூறியுள்ளார்.
எதிர்க்கட்சியின் உரிமைகளையும், வாய்ப்புகளையும் முடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது சபாநாயகரின்கடமை.
உங்கள் மீது நம்பிக்கை வைத்துத்தான் சபையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஆனால், நீங்கள்வாய்ப்பளிக்காத காரணத்தால் வெளிநடப்பு செய்தோம். 3 நாட்களாக சாத்தூர் ராமச்சந்திரனுக்கு பேசவாய்ப்பளிக்கப்படவில்லை.
பேச வாய்ப்பளிக்கப்பட வேண்டியவர்கள் பட்டியிலில் சாத்தூர் ராமச்சந்திரனின் பெயர் இடம் பெற்றிருந்தும்அவருக்கு பேச வாய்ப்பளிக்கப்படவில்லை. சபாநாயகர் பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்தாலும், அவர் பேசஅனுமதிக்கப்படுவதில்லை என்றார் துரைமுருகன்.
இதற்கு பதிலளித்து சட்டசபை சபாநாயகர் காளிமுத்து கூறுகையில்,
எதிர்க்கட்சியினரை குரலை ஒடுக்க வேண்டும் என்பது என் நோக்கம் கிடையாது. தன் கட்சியைச் சேர்ந்தஎம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு தரவில்லை என்று ஞானசேகரன் என் அறைக்கு வந்து தர்ணா செய்யாத குறையாககேட்டார். அதே போல் போரூர் வரதன், யசோதா ஆகியோரும் என்னிடம் முறையிட்டனர்.
ஆளுங்கட்சி சார்பில் 30, 40 பேர் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டனர். 11 பேருக்குதான் வாய்ப்பு அளிக்கப்பட்டது.அவர்களுக்கும் 2 மணி 50 நிமிடங்கள் பேசுவதற்குத்தான் வாய்ப்பளிக்கப்பட்டது. திமுக சார்பில் 5எம்.எல்.ஏக்களிக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டது. அவர்கள் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் பேசினர்.
தமாக சார்பில் 5 எம்.எல்.ஏக்கள் 1 மணி நேரம் 52 நிமிடங்கள் பேசினர். பாமக எம்.எல்.ஏக்கள் 4 பேர் 1 மணிநேரம் 13 நிமிடங்கள் பேசினர். காங்கிரஸ் சார்பில் 3 எம்.எல்.ஏக்களுக்கும், மார்க்சிஸ்ட் சார்பில் 3எம்.எல்.ஏக்களுக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 1 எம்.எல்.ஏக்கும் முஸ்லீம் லீக் சார்பில் 1எம்.எல்.ஏவுக்கும் பேச வாய்ப்பளிக்கப்பட்டது.
என் மீது நீங்கள் கொண்டுள்ள மதிப்புக்கும், மரியாதைக்கும் நன்றி. சாத்தூர் ராமச்சந்திரன் நாங்கள் அறியாதவர்அல்ல. பேசும் எம்.எல்.ஏக்கள் மணியடித்ததும், பேச்சை முடித்துக் கொண்டால் அனைத்து உறுப்பினர்களுக்கும் பேசவாய்ப்பு கிடைக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications