கற்பழித்தவரை ஜாமீனில் எடுத்து திருமணம் செய்த புதுமைப் பெண்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

தன்னை கற்பழித்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தவரை ஜாமீனில் எடுத்து மணந்து கொண்டார் புதுமைப் பெண்ஒருவர்.

இந்த சம்பவம் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள வடூவூர்பட்டியில் நடந்துள்ளது.

வடூவூர்பட்டியில் வசித்து வருவபர் சாமுவேல். இவரது மகள் தங்கச்செல்வம் (வயது 18). களக்காடு பகுதியில்வாழ்ந்து வருபவர் பொன்திரவியம் (வயது 25). சில தினங்களுக்கு முன் இவர் தங்கச்செல்வத்தை தூக்கிச் சென்றுகற்பழித்துவிடடார்.

இது குறித்து முன்னீர் பள்ளம் போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் முன்னீர்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்திரவியம் மற்றும் கற்பழிப்புக்கு உடந்தையாக இருந்த அவரதுநண்பர் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் தன்னை கற்பழித்த பொன் திரவியத்தை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த தங்கச்செல்வம், தன்விருப்பத்தை முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கூறினார்.

அவர் தங்கச்செல்லவத்தின் விருப்பத்தை பொன் திரவியத்திடம் தெரிவித்தார். அவரும் திருமணத்திற்குசம்மதித்தார். இதையடுத்து திருமணத்திற்காக பொன் திரவியம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

திருமணம் களக்காட்டில் உள்ள கிறிஸ்துவ சர்ச்சில் நடந்தது. திருமணம் முடிந்த பின் பொன் திரவியம் மீண்டும்சிறையில் அடைக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+