மூப்பனார் உடல் நிலை மோசமடைந்தது
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனாரின் உடல்நிலை, கடந்த 36 மணி நேரத்தில் மேலும்மோசமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த 19ம் தேதி அவருடைய பிறந்த நாள் விழாவை, தமிழகம் முழுவதிலும் உள்ள தமாகாவினர் கொண்டாடினர்.சென்னையில் சிறப்பு ரத்த தான முகாமும் நடைபெற்றது.
மூப்பனார் உடல் நலம் பெறுவதற்காக, கோவில்களில் பிரார்த்தனைகள் நடந்தன. சென்னை-வடபழனி முருகன்கோவிலில், தங்கத் தேர் இழுத்து தமாகாவினர் மூப்பனாருக்காகப் பிரார்த்தனை செய்தனர்.
மேலும், ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்குச் சென்றுமூப்பனாரின் உடல் நிலையை விசாரித்தனர்.
இந்நிலையில், தற்போது அவருடைய உடல் நிலை மோசமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த 36 மணி நேரத்தில் மூப்பனாரின் உடல் நிலை, தொடர்ந்து மோசமடைந்து வருவதாக, அவருக்கு சிகிச்சைஅளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications