ரிமாண்ட் கைதிகள் தப்புவதைத் தடுக்க வீடியோ கான்பரன்சிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கைதிகளை சிறையில் இருந்து தண்டனை நீட்டிப்புக்காக கோர்ட்டுக்கு கொண்டுவரும் போது அவர்கள்தப்பிவிடாமல் தடுக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சட்டசபையில் இன்று நீதித்துறை மீதான விவாதம் நடந்தது. அப்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தமிழகசட்டம் மற்றும் நிதி அமைச்சர் பொன்னையன் கூறியதாவது,

ஜெயிலில் இருந்து கைதிகள் தண்டனை நீட்டிப்புக்காக கோர்ட்டுக்கு கொண்டு வரப்படும்போது அவர்கள் சிலசமயங்களில் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி விடுவது உண்டு. அவ்வாறு அவர்கள் தப்புவதைத் தடுக்க "தகவல்தொழில்நுட்பத்தின்" உதவியுடன் "வீடியோ கான்பெரன்ஸிங்" என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறதுஎன்றார்.

அப்போது முதல்வர் ஜெயலலிதா குறிக்கிட்டு அந்தத்திட்டம் பற்றி விரிவாக விளக்கினார். அவர் கூறியதாவது,

"வீடியோ கான்பெரன்ஸிங்" என்பது தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புதிய முறை. இந்தமுறையில் ஒவ்வொரு கட்டத்திலும் சிறைகளில் உள்ள கைதிகளில் யார் யார் தண்டனை நீட்டிப்பு பெற வேண்டியகைதிகள் பிரித்தறியப்படுவார்கள். பிறகு அவர்கள் அனைவரும் சிறைக்குள்ளேயே ஒரு இடத்தில்அமரவைக்கப்பட்டு வீடியோ மூலம் நீதிமன்றத்தில் அமர்ந்திருக்கும் நீதிபதிக்கு காண்பிக்கப்படுவார்கள்.

நீதிபதி அங்கு உட்கார்ந்து கொண்டே குறிப்பிட்ட கைதிக்கு தண்டனை நீட்டித்து தீர்ப்பு வழங்கமுடியும். இதனால்கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் வழியில் கைதிகள் போலீசார் பிடியில் இருந்து தப்புவது தவிர்க்கப்படும்.இவ்வாறு முதல்வர் கூறினார்.

தொடர்ந்து பொன்னையன் பேசுகையில், சிறைகளில் உள்ள கைதிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதாஎன்பதைச் சோதிக்கவும், தரமற்ற உணவு வழங்கப்படுவதைத் தடுக்கவும் பல புதிய முறைகள் கடைபிடிக்கப்படும்.

மேலும் கடந்த ஆட்சியில் நல்ல உணவுப்பொருட்கள் வழங்குவதில் ரூ.1 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது.அது குறித்து விரைவில் விசாரிக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+