தே.ஜ. கூட்டணி தலைவர்களுக்கு வாஜ்பாய் விருந்து
டெல்லி:
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் எம்.பிக்களுக்கு பிரதமர் வாஜ்பாய் விருந்து அளித்தார்.
கூட்டத்தில் யூ.டி.ஐ. விவகாரம் மற்றும் தெஹல்கா டாட் காம் ஆயுத பேர ஊழல் விவகாரம் உட்பட பல முக்கியபிரச்சனைகள் பற்றி அனைத்து கட்சித் தலைவர்களின் கருத்துகளும் கேட்டறியப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் எம்.பிக்களுக்கு பிரதமர் நேற்று விருந்துவைத்தார்.
டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடந்த இந்த விருந்தில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் உட்பட அனைத்துகூட்டணிக் கட்சி எம்.பிக்களும் கலந்து கொண்டனர்.
ஆந்திர முதல்வர் சந்திர பாபுநாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வாஜ்பாய் அரசுக்கு அமைச்சரவையில்இடம்பெறாமல் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறது. இந்தக் கட்சி எம்.பிக்களும் விருந்தில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.
விருந்தின் போது பல புகழ்பெற்ற கவிஞர்கள் பலர் கலந்துகொண்டு பாடல்கள் பாடினார்கள்.












Click it and Unblock the Notifications