இந்திய-இராக் நட்புறவு மீண்டும் ஆரம்பம்
டெல்லி:
இராக்குடன் இந்தியா தனது நட்புறவை மீண்டும் பலப்படுத்த முடிவுசெய்துள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிக்கூட்டத்திற்குப் பிறகு ராஜ்யசபைத் துணைத்தலைவர் நஜ்மா ஹெப்துல்லா வரும் வெள்ளிக்கிழமை இராக் பயணம்செய்கிறார்.
அன்று முதல் இன்று வரை அமெரிக்காவின் முக்கிய எதிரியாகத் திகழும் இராக் மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்துள்ளளது.
இந்தியாவும் கடந்த சில வருடங்களாக அமெரிக்காவுடன் நட்பை வளர்த்து வருவதால் இராக்குடன் எந்தவிதத்தொடர்பும் வைத்துக் கொள்ளாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் பெருகி வரும் எரிபொருள் பற்றாக்குறையைச் சமாளிக்க இராக்கை நாடினால் தான் முடியும் என்றுமத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக அமெரிக்கா இந்தியாவைப் பற்றி என்ன நினைத்தாலும் அதைப்பற்றிக் கவலையில்லை என்று மத்தியஅரசு முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 81 எம்.பிக்களை தனி விமானத்தில் இராக்குக்கு அனுப்புகிறதுஇந்தியா. நாளை (வெள்ளிக்கிழமை) ராஜ்யசபைத் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா தலைமையில் இந்தக்குழு இராக் செல்கிறது.
அங்கு சென்று இந்தக் குழு அந்நாட்டு அதிபர் மற்றும் பல அதிகாரிகளைச் சந்தித்து வாணிபம் மற்றும் அரசியல்உறவை மேம்படுத்த பேச்சு நடத்தும் என்று கூறப்படுகிறது.
மேலும் எந்த விமானமும் பறக்கக் கூடாது என்று அமெரிக்கா தடைவிதித்துள்ள "நோ பிளை ஸோன்" பகுதிவழியாக இந்திய விமானம் பறக்க உள்ளது.
வளைகுடாப் போருக்குப் பின் இராக்கிற்கு அளிக்கப்பட்ட தண்டனைகள் போதுமானது என்று இந்தியாநினைக்கிறது. இந்தியாவின் எரிபொருள் பற்றாக்குறைச் சமாளிக்க வேறு வழியில்லை. இந்தப் பயணத்தை அடுத்துஅமெரிக்கா என்ன நினைத்தாலும் அதைச் சந்திக்க இந்தியா தயாகார உள்ளது.