த.மா.கா. தலைவராகிறார் மூப்பனாரின் மகன்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக அவரது மகன் கோவிந்தவாசன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றுதெரிகிறது.
கட்சியில் வேறு யாரையும் தலைவராக ஏற்க த.மா.காவில் தொண்டர்கள் தயாராக இல்லை. இது தவிர காங்கிரஸ்கட்சிக்கே உரிய கோஷ்டிப் பூசல்களும் த.மா.கவில் உண்டு.
மூப்பனார் என்ற ஒரு தலைவருக்குத் தான் இந்த எல்லா கோஷ்டித் தலைவர்களும் அடங்கி இருந்தனர்.
இப்போது கட்சியைக் கட்டிக் காக்க அவரது மகன் கோவிந்தவாசனையே தலைவராக்கிவிட கட்சியினர்திட்டமிட்டுள்ளனர். இதற்காக த.மா.கவின் பொதுக் குழுக் கூட்டம் அவசரமாகக் கூடுகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போதே மூப்பனாரின் உடல் நிலை குலைந்துவிட்டது. இதையடுத்து கட்சியின் முக்கியமுடிவுகளை கோவிந்தவாசன் தான் எடுத்தார். அதிமுக கூட்டணி வைத்தது, கட்சியை வெற்றிக்கு இட்டுச் சென்றதுஆகியவற்றில் கோவிந்தவாசனுக்கு முக்கிய பங்கு உண்டு.
தனது தந்தையைப் போலவே மிக எளிமையானவர் கோவிந்தவாசன்.