இலங்கை டெஸ்ட்: தோல்வியை நோக்கி இந்தியா
கொழும்பு:
இலங்கையில் நடந்து வரும் இந்திய- இலங்கை அணிகளுக்கிடையிலான 3 வது டெஸ்ட்டின் 4-வது நாளான இன்றுஇந்தியா இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
முன்னதாக இந்தியா தனது முதல் இன்னிங்சில் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து 376 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சைத் துவங்கியது.
துவக்கத்தில் களம் இறங்கிய ரமேஷும், தாசும் ஓரளவு நன்றாக ஆடினார்கள். தாஸ் 68 ரன்களும், ரமேஷ் 55ரன்களும், டிராவிட் 36 ம், கங்குலி 30 ம் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.
இன்றைய ஆட்டத்தின் இறுதியில் 217 ரன்கள் எடுத்தநிலையில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இதையடுத்து இன்னும் 159 ரன்கள் எடுத்தால் தான் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியையே தவிர்க்க முடியும்என்ற இக்கட்டான நிலையில் உள்ளது.
எஞ்சிய 4 விக்கெட்டுகளுடன் தோல்வியின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது இந்திய அணி.












Click it and Unblock the Notifications