மேட்டூர் அணை நீர்மட்டம் குறைகிறது ... மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்
சேலம்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மேட்டூர் அணியின் நீர் மட்டம் 47 அடியாக இருந்தது. இது இன்னும் 2நாட்களில் மேலும் குறைந்து விடும் என்ற நிலை இருப்பதால், மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் பாதிக்கப்படும்அபாயம் உள்ளது.
18 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போதுதான் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் குறைந்துவருவதால், அங்குள்ள மீன்களும் இறந்து போகும் வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை மேட்டூர் அணையின்பொறியாளர்கள் தெரிவித்தனர்.
காவிரி நதி நீர் ஆணையத்தின் கண்காணிப்புக் குழு கூட்டம், வரும் 6ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.அப்போது எடுக்கப்படும் முடிவில்தான் காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடுமா என்பது தெரியவரும்.
மேட்டூர் அணையை கடந்த 2 நாட்களுக்கு முன் பார்வையிட்ட மத்திய நீர்வள ஆய்வுக்குழு, தற்போதுகர்நாடகத்தில் முகாமிட்டுள்ளது. அக்குழுவினர் கர்நாடக அணைகளை பார்விைட்டபின், தங்கள் அறிக்கையைகாவிரி நடுவர் மன்றத்திடமும், காவிரி நதிநீர் ஆணையத்தின் கண்காணிப்பு குழுவிடமும் சமர்ப்பிக்கும்.
ஆய்வுக்குழுவின் அறிக்கைதான் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் முக்கியாக விவாதிக்கப்படவுள்ளது.
தஞ்சாவூரில் கடும் மழை
விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், நேற்று (சனிக்கிழமை)இரவு தஞ்சாவூரில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இன்று காலையிலும் லேசான மழை பெய்தது.
இந்த மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்தது. இதே போல் தொடர்ந்து மழை பெய்தால் குறுவை பயிர்கள்பிழைத்துக் கொள்ளும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
கருணை காட்டுவாரா வருண பகவான்?