3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு அழைப்பது சரியல்ல- வைகோ
சென்னை:
சென்னை போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் உள்ளிட்ட 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு அழைப்பதுஇதுவரை இல்லாத முன்மாதிரி என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
கூட்டத்துக்கு பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். எல்.கணேசன், மத்திய அமைச்சர்கள் செஞ்சிராமச்சந்திரன், கண்ணப்பன் மற்றும் முன்னணித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் நிலை என்ன என்பது குறித்து பேசப்பட்டது. கூட்டம் முடிந்ததும்வைகோ நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சென்னையில் நிலவும் குடிநீர்ப்பிரச்சனை மற்றும் பொதுப் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் அரசு மெத்தனம்காட்டி வருகிறது.
இதை எதிர்த்து வரும் 18ம் தேதி சென்னை குடிநீர் வாரியம் எதிரில் எனது தலைமையில் அறப்போர் ஆர்ப்பாட்டம்நடைபெறும்.
உள்ளாட்சித் தேர்தலில் எங்களுடன் எந்த அரசியல் கட்சியாவது இணைந்து பணியாற்ற விரும்பினால்வரவேற்போம். ஆனால் அதிமுக, திமுகவுடன் நாங்கள் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம். மேலும்பா.ம.கவுடன் நாங்கள் கடைபிடித்துவரும் தோழமையைத் தொடர்வோம்.
அதிமுக ஆட்சி 100 நாட்களில் இதுவரை எந்த ஆட்சியும் பெறாத அளவுக்கு வெறுப்பையும், அதிருப்தியையும்பெற்றுள்ளது.
நாங்கள் எப்போதும் அரசியல் சட்டம் 356க்கு எதிரானவர்கள் தான். அந்தச் சட்டத்தையேநீக்க வேண்டும் என்பதில்உறுதியாக இருக்கிறோம்.
திமுக தலைவர் குருணாநிதியும், ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று விரும்பவில்லை என்றுதான் சொல்கிறார்.ஆனால் திமுக எம்.பிக்கள் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கூச்சல் எழுப்புகிறார்கள்.
இதைப்பற்றி கலைஞரிடம் கேட்டால் உணர்ச்சி வசப்பட்டு அப்படிக் கூறியிருப்பார்கள் என்கிறார்.
மேலும் இலங்கைக்கு ரசாயன ஆயுதங்களை ரஷ்யா வழங்கியதாகக் கூறப்படுகிறது. ரஷியா அப்படிச்செய்திருந்தால் அது ஈழத் தமிழர்களை அழிப்பதற்கான நடவடிக்கையாகும். இது குறித்து நான் பிரதமர்வாஜ்பாயிடம் பேசுவேன்.
மேலும் தமிழகத்தில் பணியாற்றும் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு அழைப்பது இதுவரை எந்த அரசும்கடைபிடிக்காத ஒரு முன் உதாரணம்.
மத்திய அரசின் இந்த முடிவு தவறானது.மேலும் மாநில அரசின் சுயாட்சிக் கொள்கைக்கு எதிரானது. போலீஸ்அதிகாரிகள் தவறு செய்திருந்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.
எனது இந்தக் கருத்தை பிரதமரிடமும் உள்துறை அமைச்சரிடமும் தெரிவித்து இருக்கிறேன் என்று வைகோகூறினார்.












Click it and Unblock the Notifications