முதல்வர் விளக்கம்... கருணாநிதி கருத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபையில் தான் நீதிமன்றங்கள், நீதிபதிகள் குறித்துத் தவறாக பேசவில்லை என்று முதல்வர் ஜெயலலிதாகூறியிருப்பது குறித்து முன்னாள் முதல்வர் கருணாநிதி கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து திங்கள்கிழமை சட்டசபையில் இதுகுறித்து தன்னிலை விளக்கம் அளித்து அந்தப் புகார்களை மறுத்தார்ஜெயலலிதா.
இதுகுறித்து கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது:
சனிக்கிழமை முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரை என்ன என்பது அமைச்சர்களுக்கும், சட்டசபைஉறுப்பினர்களுக்கும் நன்றாகத் தெரியும்.
மேலும், அவருடைய பேச்சு குறித்த வீடியோ படம் தெளிவாக உள்ளது. இதை அனைவரும் பார்த்துள்ளனர்.
இந்த வீடியோ படத்தையும், இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிக்கைகளையும் பொதுமக்களே ஒப்பிட்டுப்பார்க்கட்டும்.
அப்போது, எது பொய், எது உண்மை என்பதை அவர்களே உணர்வர் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications