For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பார்த்தசாரதி கோவிலுக்கு ஜெ. பசு-கன்று காணிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை-திருவல்லிக்கேணியிலுள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு ஒரு பசுவையும், ஒரு கன்றுக் குட்டியையும் தமிழகமுதல்வர் காணிக்கையாகச் செலுத்தினார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.20 மணிக்கு, தன் தோழி சசிகலாவை அழைத்துக் கொண்டு பார்த்தசாரதிகோலுக்குச் சென்றார் ஜெயலலிதா. 2 பேரும் ஒரே நிறத்தில் பட்டுப் புடவை அணிந்திருந்தனர்.

பார்த்தசாரதி கோவிலின் இணை கமிஷனர் தனபாலன் 2 பேரையும் வரவேற்றார். ஏற்கனவே அங்கு கொண்டுவரப்பட்டிருந்த பசுவையும் கன்றுக்குட்டியையும் கோவில் வாசலிலேயே கோவிலுக்குக் காணிக்கையாகஜெயலலிதா செலுத்தினார்.

பிறகு, நேராக சுவாமி தரிசனத்திற்காக 2 பேரும் சென்றனர். அர்ச்சனை, அபிஷேகம், விசேஷ பூஜைகள் நடந்தபிறகு, ஜெயலலிதாவும் சசிகலாவும் கோவில் பிரகாரத்தைச் சுற்றி வந்தனர்.

முக்கால் மணி நேரத்திலேயே அவர்கள் 2 பேரும் அனைத்தையும் முடித்து விட்டு, கிளம்பிச் சென்றனர். இந்தக்காணிக்கை நிகழ்ச்சி பற்றி முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. அதனால் உள்ளூர் பிரமுகர்கள் மட்டும் இதில்கலந்து கொண்டனர்.

டான்சி வழக்கின் மேல் முறையீட்டு விசாரணைக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில்ஜெயலலிதா இன்று மனு தாக்கல் செய்கிறார். இந்நிலையில், பார்த்தசாரதி கோவிலுக்கு பசு-கன்று காணிக்கைவழங்கியுள்ளார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.

தான் தமிழக முதல்வரானால் யானை காணிக்கை அளிப்பதாக ஜெயலலிதா குருவாயூர் கோவிலுக்குவேண்டியிருந்தார். அதன்படி, பலத்த பல அரசியல் நெருக்கடிகளுக்கிடையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்யானையைக் காணிக்கையாகச் செலுத்தினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X