விபத்தில் ஊமையான மருத்துவக் கல்லூரி மாணவிக்கு ரூ.30 லட்சம் நஷ்ட ஈடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சாலை விபத்தில் சிக்கி ஊமையான மருத்துவக் கல்லூரி மாணவிக்கு ரூ.30.65 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும்என்று இன்சூரன்ஸ் கம்பெனிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவரின் மகள் ஆனந்தி. இவர் சென்னையில் உள்ளமருத்துவக் கல்லூரி ஒன்றில் இறுதியாண்டு படித்துவந்தார்.

கடந்த 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி தாம்பரம் அருகே ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த போது, எதிரில்வந்த லாரி, ஆட்டோவில் மோதியது.

இந்த விபத்தில் ஆட்டோவில் வந்த பாஸ்கர் பாபு, அழகப்பன், சுந்தர் ஆகியோர் இறந்துவிட்டனர். மேலும்பாலசுப்ரமணியம், ஆனந்தி மற்றும் சுரேஷ் பாபு ஆகியோர் படுகாயமடைந்தனர்.

சிகிச்சைக்குப் பிறகு, மாணவி ஆனந்தி வாய் பேசும் திறனையும், காது கேட்கும் திறனையும் இழந்தார். மேலும்அவர் தானாக நடக்க முடியாத நிலையிலும் இருக்கிறார்.

இதையடுத்து ஆனந்தியின் தந்தை பாலசுப்ரமணியம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்துகள்தீர்ப்பாயத்தில், விபத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தன் மகளுக்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு கேட்டு, வழக்குத்தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதாசிவம் மற்றும் சுப்புலட்சுமி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், தனதுதீர்ப்பில் கூறியிருப்பதாவது:

விபத்தில் பாதிக்கப்பட்ட ஆனந்திக்கு ரூ.30.65 லட்சத்தை 9 சதவீத வட்டியுடன் வழங்கவேண்டும்.

மேலும், விபத்தில் இறநந்த பாஸ்கர் பாபுவின் குடும்பத்துக்கு ரூ.2.40 லட்சமும், பாலசுப்ரமணியத்திற்கு ரூ.2.34லட்சமும், சுரேஷ் பாபுவுக்கு ரூ.60 லட்சமும், அழகப்பனுக்கு ரூ.5 லட்சமும், சுந்தருக்கு ரூ.3.12 லட்சமும் நஷ்ட ஈடாகவழங்க வேண்டும் என்று இன்சூரன்சு கம்பெனிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+