அறக்கட்டளை விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் இளங்கோவன் மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை விவகாரத்தில் த.மா.கா. சார்பில் வழக்கு தொடரப்பட்டால், அந்த வழக்கில்தனது கருத்தையும் கேட்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் மனு தாக்கல் செய்துள்ளார்.

காமராஜரால் ஆரம்பிக்கப்பட்டது தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை. கடந்த வாரம் மூப்பனார் மறைந்தது முதல்,அறக்கட்டளை கதி என்ன என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது.

இக்கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக, மூப்பனார் மறைந்த 2 நாட்களில், அறக்கட்டளைக்கு 5 புதியஅறங்காவலர்களை அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி நியமித்தார்.

இந்த புதிய அறங்காலர்களில், முன்னாள் எம்.பி.யும் த.மா.காவின் முன்னணித் தலைவர்களில் ஒருவருமானஜெயந்தி நடராஜனும் ஒருவர். தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், எம்.பி.சுதர்சன நாச்சியப்பன், யசோதாஎம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் அருணாச்சலம் ஆகிய மற்ற 4 அறங்காவலர்களும் காங்கிரசைச்சேர்ந்தவர்கள்.

அது மட்டுமில்லாமல், மூப்பனாருடன் அறங்காவலர்களாக செயல்பட்டு வந்த சேலம் ராமசாமி உடையார் மற்றும்வரதராஜூலு ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சோனியா காந்தியின் இந்தத் திடீர் அறிவிப்பால்,தமாகா தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்செய்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை விவகாரம் தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் வழக்குத்தொடரப்பட்டால், அந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தனது கருத்தையும் கேட்க வேண்டும் என்று கோரிஇளங்கோவன் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதற்கிடையில் நீண்ட காலமாக, அறக்கட்டளை உறுப்பினராக இருக்கும் ராமசாமி உடையார், புதிதாகஅறங்காவல்களை நியமித்திருப்பதை எதிர்த்து வழக்கு தொடர்வார் என்று சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+