For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

6ம் தேதி கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கை நாடாளுமன்றம் வரும் 6ம் தேதி (வியாழக்கிழமை) கூடவிருக்கிறது. இந்த தகவலை இலங்கை வானொலிதெரிவித்துள்ளது.

225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளும் மக்கள் கூட்டணிக்கு 109 எம்.பிக்கள்உள்ளனர். ஆளும் கட்சிக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்ததால் சந்திரிகா ஆட்சி அமைத்தார்.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன், சந்திரிகா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை முஸ்லிம் காங்கிரஸ்விலக்கிக் கொண்டது. இதனால் சந்திரிகா அரசு பெரும்பான்மையை இழந்தது.

இதையடுத்து எதிர்க்கட்சிகள் சந்திரிகா அரசின் மீது நம்பிகக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இதனால்சந்திரிகா நாடாளுமன்றத்தை 2 மாத காலத்திற்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில் சிங்கள அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனாவின் (ஜே.வி.பி) ஆதரவை கோரியிருந்தார்சந்திரிகா. அவர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சந்திரிகா பேச்சுவார்த்தை நடத்தினார். ஜே.வி.பி. விடுத்தமுக்கிய கோரிக்கைகளை ஏற்க சந்திரிகா சம்மதித்தார் இதையடுத்து ஜே.வி.பி, சந்திரிகா அரசுக்கு வெளியிலிருந்துஓராண்டுகாலம் ஆதரவு கொடுக்க சம்மதித்தது.

10 எம்.பிக்களை கொண்ட ஜே.வி.பியின் ஆதரவு கிடைத்திருப்பதன் மூலம் பெரும்பான்மையை இழந்திருந்தசந்திரிகா அரசுக்கு இருந்து வந்த ஆபத்து விலகியது.

ஜே.வி.பி. விடுத்த கோரிக்கைளில் ஒன்று, தற்போது 40 அமைச்சர்களைக் கொண்டுள்ள இலங்கைஅமைச்சரவையை 20 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையாக்க வேண்டும் என்பது. இதற்கு சந்திரிகா சம்மதம்தெரிவித்துள்ளார்.

மேலும் அக்டோபர் மாதம் 18 தேதி நடத்தவிருந்த பொதுவாக்கெடுப்பையும் ரத்து செய்ய முடிவெடுத்துள்ளார்சந்திரிகா.

இந்நிலையில் 2 மாத கால இடைவேளைக்கு பிறகு இலங்கை நாடாளுமன்றத்தை வரும் 6ம் தேதி சந்திரிகாகூட்டுகிறார். இந்த தகவலை இலங்கை வானொலி தெரிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X