பத்திரிக்கையாளர் ஓய்வூதியம் அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.2,000 என்பதிலிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்படும்என்று மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திருநாவுக்கரசு கூறினார்.
பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.5,000 ஆக அதிகரிக்கப்படுகிறது. அதேபோல,பத்திரிக்கையாளர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ.500லிருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்படுகிறது என்றார்.
அதிமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுவருவதாக அதிமுக அரசின் மீது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருவதாகச் சொல்லப்பட்டது.
இந்த ஓய்வூதிய உயர்வு அறிவிப்பின் மூலம், பத்திரிக்கையாளர்களை திருப்திப் படுத்த அதிமுக அரசு முயன்றுவருவதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications