முதல்வரானதை எதிர்க்கும் வழக்கு: ஜெ. மனு நிராகரிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தான் முதல்வராக நீடிப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரிக்கக் கூடாதுஎன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) நிராகரிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றம் இந்த மனுவை விசாரிக்கக் கூடாது என்று கோரி ஜெயலலிதாவும் உச்ச நீதிமன்றத்தில் ஒருமனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த 2 மனுக்களின் மீதான விசாரணையும், இன்று உச்சநீதிமன்றத்தில், நீதிபதி பரூச்சா தலைமையிலான 5நீதிபதிகள் அடங்கிய "அரசியலமைப்பு பெஞ்ச்" முன்பு விசாரணைக்கு வந்தது.
இவற்றில், ஜெயலலிதாவின் மனு நிராகரிக்கப்பட்டது.
வழக்கறிஞர் கபூரின் மனு மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விசாரணையின் தீர்ப்பை அரசியல்வாதிகள் மட்டுமில்லாமல் தமிழகமேபரபரப்புடனும் ஆவலுடனும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications