For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு வழக்கறிஞரை "பொய்யர்" என்ற அதிமுக வழக்கறிஞர்கள்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

டான்சி மற்றும் "பிளசன்ட் ஸ்டே" ஓட்டல் வழக்குகளில் அரசு வழக்கறிஞராக ஆஜராகி வரும் வழக்கறிஞர்வெங்கடபதியை "பொய்யர்" என்று விமர்சித்து, சென்னையிலிருந்து அதிமுக வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட்நீதிபதிக்கு தந்தி அனுப்பியுள்ளனர்.

இதற்கு அந்த வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி பரூச்சா தலைமையிலான பெஞ்ச் பண்டனம் தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர் வெங்கடபதி டான்சி மற்றும் கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளில் அரசு சார்பில்ஆஜராகி வருகிறார்.

இவர், "இந்த 2 வழக்குகளிலும் தனக்கு போதுமான ஆவணங்கள் வழங்கப்பட வில்லை. மேலும் இந்த வழக்குகளில்குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, தமிழகத்தின் முதலமைச்சராகவும் உள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்திலேயே விசாரித்தால், நீதித்துறை மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இருக்காது. எனவே இந்த வழக்கு விசாரணையை வேறு ஏதாவது ஒரு உயர் நீதிமன்றத்திற்குமாற்ற வேண்டும்" என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து இந்த 2 வழக்குகளின் அப்பீல் மனுக்களை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து சுப்ரீம் கோர்ட்நீதிபதி பரூச்சா தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பளித்தது.

மேலும் இந்த இடைக்காலத் தடையை நீக்கக் கோரியும், அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையைதொடரவேண்டும் என்று கோரியும் ஜெயலலிதா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மற்றொரு அப்பீல் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு வழக்கறிஞர் வெங்கடபதியை "பொய்யர்" என்று விமர்சித்து சென்னை பார் கவுன்சிலில் உள்ளஅதிமுக வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு தந்தி அனுப்பியுள்ளனர்.

இதற்கு நீதிபதி பரூச்சா கடும் கண்டனம் தெரிவித்ததோடு, சென்னை பார் கவுன்சில் இதுபோன்ற செயல்களைஉடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் ஜெயலலிதாவின் வக்கீலான வேணுகோபாலும், "இது போன்ற தந்திகளை அனுப்பியது முட்டாள்தனமானது. விசாரணைகளின் வேகத்தை இது மேலும் பாதிக்கும்" என்று கூறி எரிச்சல் பட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X