உள்ளாட்சித் தேர்தல்... சின்னங்கள் தயார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அடுத்த மாதம் நடைபறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான சின்னங்கள் தயாராகி விட்டதாக தமிழக தேர்தல்ஆணையர் பி.எஸ். பாண்டியன் கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஒவ்வொரு கிராமப்புற வாக்காளரும் 4ஓட்டுக்கள் அளிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் தலா 2ஓட்டுக்கள் போட வேண்டும்.
ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத் தலைவர்களை அந்தந்த வார்டு உறுப்பினர்களே தேர்வு செய்வர்.
வழக்கமான தேர்தல் சின்னங்கள் இந்தத் தேர்தலிலும் உண்டு. இருப்பினும் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும்வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் அரசியல் சின்னங்கள் கிடையாது.
பிற பதவிகளுக்கு அரசியல் கட்சிகளுக்குரிய சின்னங்கள் ஒதுக்கப்படும். மொத்தம் 50 சின்னங்கள் தற்போதுதயாராக உள்ளன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications