கள்ளக்காதலுக்கு இடையூறு: மகனைக் கொன்ற தாய்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனைக் கிணற்றில் வீசி எறிந்து கொன்றார் அந்தச் சிறுவனின் தாய்.

சென்னை எண்ணூ

சம்பவ தினத்தன்று கார்த்திக் பள்ளி முடிந்து, அந்தப் பள்ளியின் ஆயாவால் வீட்டிற்குக் கொண்டு வந்துவிடப்பட்டுள்ளான். அதற்குப் பிறகு அவன் காணாமல் போய் விட்டதாக தனது மனைவி கஸ்தூரி கூறியதாகவிஜயக்குமார் போலீஸாரிடம் தெரிவித்தார்.

கஸ்தூரியிடம் இதுகுறித்து விசாரித்தபோது அவர் கூறிய தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்தது.இதையடுத்து கஸ்தூரியிடம் நடந்த தீவிர விசாரணையின் விளைவாக, தான்தான் தனது மகன் கார்த்திக்கைக்கொன்றதாக அவர் ஒப்புக் கொண்டார்.

கஸ்தூரிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தனசேகரன் என்பவருக்கும் கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும்கணவன், மனைவி போல உல்லாசமாக இருந்துள்ளனர். இந்தக் காதல் தொடர்பாக, தனது மூத்த மகனை தனது தாய்வீட்டில் விட்டு விட்டார் கஸ்தூரி. இதையடுத்து கணவர் வேலைக்குச் சென்றவுடன் தனசேகரனை வீட்டிற்குவரவழைத்து சந்தோஷமாக இருந்துள்ளார்.

இருப்பினும் சின்ன மகன் கார்த்திக் தன்னுடன் இருப்பதை இடையூறாக அவர் கருதினார். எனவே அவனை வேறுஎங்காவது விட்டுவிட்டு வந்து விடலாம் என்று கருதி பள்ளி முடிந்து வந்ததும், அவனைத் தூக்கிக் கொண்டுதனசேகரனுடன் எண்ணூ

அங்குள்ள ரயில்வே குடியிருப்பு அருகேயுள்ள கிணற்றைப் பார்த்ததும், கார்த்திக்கை அதில் தூக்கிப் போட்டுள்ளார்.பின்னர் வீட்டுக்குத் திரும்பி வந்து குழந்தையைக் காணவில்லை என்று கணவரிடம் கூறினார். அவர் காசிமேடுகாவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் கொடுத்தார்.

தற்போது கஸ்தூரி மற்றும் தனசேகரனை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னையில் கள்ளக் காதலுக்காகபெற்ற தாயையே ஒரு மகள் கடந்த வியாழக்கிழமை கொலை செய்தார். இப்போது அதே கள்ளக் காதலுக்காகபெற்ற குழந்தையைக் கொன்றுள்ளார் தாய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+