கிரிக்கெட்: இந்திய அணியில் மீண்டும் சச்சின், கும்ளே
மும்பை:
இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கரும், சுழல் பந்து வீச்சாளர் அனில் கும்ளேயும்மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
துவக்க ஆட்டக்காரர் சிவ சுந்தர் தாசும், விக்கெட் கீப்பர் தீப் தாஸ் குப்தாவும் இவ்வணியில் இடம் பெற்றுள்ளனர்
வலது கால் கட்டை விரல் எலும்பு முறிவு காரணமாக இலங்கை தொடரில் விளையாடாமல் இருந்த டெண்டுல்கர்,தோள்பட்டை அறுவை சிகிச்சை காரணமாக நீண்ட நாட்களாக விளையாடாமல் இருந்த கும்ப்ளே ஆகிய 2 பேரும்மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விளையாடிய அமய் குரேஷியா, விக்கெட் கீப்பர் சமீர் திகே,வேகப்பந்து வீச்சாளர் தேபாஷிஸ் மொகந்தி,அஜித் அகார்கர், சுழல் பந்து வீச்சாளர் ராகுல் சாங்வி, பேட்ஸ் மேன்ஹேமங் பதானி ஆகியோருக்குத் தற்போது இடம் இல்லை.
இந்திய கிரிக்கெட் டீமை வெளியிட்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜெயவந்த் லேலேசெய்தியாளர்களிடம் கூறியதாவது:
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 15 கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் முழு உடல் நலத்துடன் இருக்கிறார்களாஎன்பதற்கான ஃபிட்னெஸ் டெஸ்ட்டை, டாக்டர் ஆனந்த் ஜோஷி நடத்துவார்.
வரும் 22 அல்லது 23ம் தேதியன்று இந்தச் சோதனை நடைபெறும். பின்னர் இந்திய அணி வரும் 24ம் தேதிஜொகானஸ்பர்க் புறப்பட்டுச் செல்லும் என்று கூறினார் லேலே.
இந்திய அணி விவரம்
சவுரவ் கங்குலி (கேப்டன்), ராகுல் டிராவிட் (துணை கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ். லக்ஷ்மண், அனில்கும்ப்ளே, யுவராஜ் சிங், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், ஜவஹல் ஸ்ரீநாத், ஆஷிஷ் நெஹ்ரா, ஆர்.எஸ். சோதி,சிவ சுந்தர் தாஸ், ஜாகீர் கான், வெங்கடேஷ் பிரசாத், தீப் தாஸ் குப்தா (விக்கெட் கீப்பர்).












Click it and Unblock the Notifications