கால்நடைத் துறையில் திமுக ரூ.21 கோடி ஊழல் - அமைச்சர்
சென்னை:
கால் நடைகளுக்கு மருந்துகள் வாங்கியதில் கடந்த திமுக ஆட்சியில் ரூ.21 ஊழல் நடந்துள்ளது என்று சட்டசபையில்கால்நடை மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரப் பரிசாத் கூறினார்.
கடந்த திமுக ஆட்சியில் கால்நடைகளுக்கு மருந்து வாங்கியதில் ரூ.21 கோடி ஊழல் நடந்துள்ளது. இது பற்றிவிசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. விசாரணைமுடிந்தவுடன் அதுபற்றிய விவரங்கள் சட்டசபையில் தெரிவிக்கப்படும்.
மேலும், இந்த நிதி ஆண்டில் ரூ.206.85 லட்சம் மதிப்பில் புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. புதிதாக 10கால்நடை மருந்தகங்களைத் தோற்றுவித்தல், அபிசேகப்பட்டியில் உள்ள முர்ரா இன பொலி காளைகள் இருப்பைவலுப்படுத்துதல் போன்ற 7 முக்கியத் திட்டங்களுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தவிர ரூ.38.67 லட்சம் செலவில் மேலும் 6 புதிய திட்டங்களும் நிறைவேற்றப்பட உள்ளன.
இவற்றில் கால்நடைப் பொருட்கள் அங்காடி அமைப்பு, எருமைப் பண்ணை, மீன்பொருட்கள் தயாரிக்கும்கூடத்தை ஏற்படுத்துதல், தஞ்சாவூரில் மீனினப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் நிறுவுதல் போன்ற திட்டங்கள்இந்த ஆண்டில் செயல்படுத்தப் படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.