For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடத்தப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களும் மீட்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஆந்திர கடற் கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் என்றுதமிழக மின்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று (சனிக்கிழமை) சட்டசபையில் தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை, சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த 100க்கும் அதிகமான மீனவர்கள் ஆந்திர பகுதியில்மீன் பிடிக்கச் சென்றனர்.

அவர்கள் ஆந்திர கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடற் கொள்ளையர்கள் பலர் அவர்களைசூழ்ந்து கொண்டு கடத்திச் சென்றனர். தமிழக மீனவர்களை திரும்ப ஒப்படைக்க அவர்கள் பெரும் தொகை பணம்வேண்டும் என்று கேட்டனர்.

இதையடுத்து மீனவர்களை மீட்க போலீசார், மீனவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆந்திரா புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில், தமிழக மீனவர்கள் கடற் கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் குறித்த பிரச்சனையைதி.மு.க. எம்.எல்.ஏ. பரிதி இளம் வழுதி சனிக்கிழமை சட்டபையில் எழுப்பினார்.

இந்த பிரச்சனை குறித்து பின்னர் விவாதிக்கலாம் என்று சபாநாயகர் காளிமுத்து கூறினார். அப்போது குறுக்கிட்டமின்துறை அமைச்சர் ஜெயக்குமார், "கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட அனைத்து மீனவர்களும்மீட்கப்பட்டு விட்டனர்" என்று கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X