சென்னையில் மின்சார ரயில் மோதி மாணவன் சாவு
சென்னை:
சென்னையில், டியூஷனுக்கு சென்ற மாணவர், தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, மின்சார ரயில் மோதிமரணமடைந்தார்.
இவரது பள்ளி டவுட்டனில் உள்ளது. இவர் சிந்தாதரி பேட்டையில் டியூஷனும் படித்து வந்தார். பள்ளி முடிந்தவுடன்மாலையில் டியூஷனுக்கு சென்று டியூஷன் வகுப்பு முடிந்ததும் இவர் வீடு திரும்புவது வழக்கம்.
வெள்ளிக்கிழமை வழக்கம் போல் பள்ளி முடிந்ததும் இவர் டியூஷனுக்கு சென்றார். எழும்பூர்-பூங்கா நகர் ரயில்நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது அந்தப் பக்கம் வந்த மின்சார ரயில், ஜெகநாதன் மீது மோதியது. இதில் அவர் தூக்கி எறியப்பட்டதால்,தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவர் உடனே சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர்இறந்துவிட்டார்.
இந்த விபத்து குறித்து எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications