For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஷச் சாராய விவகாரம்: 11 போலீசார் சஸ்பெண்டு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை அம்பத்தூர் அருகே விஷச் சாராயம் குடித்து 13 பேர் இறந்து போன சம்பவத்தில், நடவடிக்கை எடுக்கதவறிய 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 11 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அம்பத்தூர் அருகே வெள்ளிக்கிழமையன்று விஷசாராயம் குடித்த 13 பேர் இறந்து போனார்கள். மேலும்பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விஷச் சாராயத்தில் மெத்தனால் எனப்படும் கெமிக்கல் கலந்திருந்ததால்தான், அதை குடித்தவர்கள்இறந்துள்ளார்கள் என்று போஸ்ட்மார்ட்ட அறிக்கைகள் கூறின.

வியாழக்கிழமை இரவு நீண்ட நேரம் விஷச் சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்ததும் இப்போது தெரியவந்துள்ளது.

செங்கல்பட்டு பகுதி போலீஸ் டி.ஐ.ஜி. ராஜேந்தின் கடந்த 2 நாட்களாக அம்பத்தூர் பகுதியில் நேரடி விசாரணைநடத்தி வருகிறார்.

விசாரணையின்போது, வியாழக்கிழமை விஷச் சாரய விற்பனை நடந்து வந்தது தெரியவந்ததையடுத்து விஷசாரயவிற்பனையை கண்டுபிடித்து தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறிய 2 இன்ஸ்பெக்டர்கள், 5 சப்-இன்ஸ்பெக்டர்கள்உள்ளிட்ட 11 பேரை சஸ்பெண்டு செய்து ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

அவர்கள் பெயர் விவரம் வருமாறு:

1. ராமநாதன்- அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்
2. பன்னீர் செல்வம் - மதுவிலக்கு இன்ஸ்பெக்டர், அம்பத்தூர்
3. புருஷோத்தமன் - சப்-இன்ஸ்பெக்டர், அம்பத்தூர்
4. ராஜசேகரன் - சப்-இன்ஸ்பெக்டர், அம்பத்தூர்
5. செந்தில் - சப்-இன்ஸ்பெக்டர், அம்பத்தூர்
6. சண்முகம் - மதுவிலக்கு போலீஸ், அம்பத்தூர்
7. ராமையா - சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர், அம்பத்தூர்
8. அப்புக்குட்டன் - ஏட்டு, அம்பத்தூர்
9. அர்னால்டு ஈஸ்டன் - மதுவிலக்கு இன்ஸ்பெக்டர், அம்பத்தூர்
10. வில்லிமஸ் - கான்ஸ்டபிள், அம்பத்தூர்
11. முனுசாமி - மது விலக்கு ஏட்டு, அம்பத்தூர்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X