மேலும் ஒரு தமிழ் தீவிரவாதி கைது
ஈரோடு:
நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு தமிழ் தீவிரவாதியை க்யூ பிராஞ்ச் போலீசார் கைதுசெய்துள்ளனர்.
கடந்த வாரம் தமிழ் தீவிரவாதி பரஞ்சோதி என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு ராஜ்குமார் கடத்தலில்தொடர்பு இருக்கககூடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் மேலும் ஒரு தமிழ் தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். இவரை தஞ்சாவூர் பஸ் ஸாடன்டில் க்யூபிராஞ்ச் போலீசார் கைது செய்தனர்.
இவர் பெயர் செல்வம் (வயது 25) என்பதும். இவர் அரியலூர் மாவட்டத்தின் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர்என்பதும் விசாரணையின் போது தெரியவந்தது. இவர் தாளவாடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இவரை போலீசார் விசாரித்தபோது, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 31ம் தேதி கடம்பூர் கானங்குளத்தைச் சேர்ந்தமணியகவுண்டர் மனைவி மஞ்சுளாவிடமிருந்து 7 பவுன் சங்கிலி, ரூ.10,000 ஆகியவற்றை செல்வமும் வீரப்பனின்கூட்டாளிகள் பலரும் கொள்ளையடித்தது தெரியவந்தது.
மேலும் செல்வம் கூறியதன் பேரில், பங்களாபுதூர் காட்டில் மணிக்கரை என்ற இடத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 3 துப்பாக்கிகள், 2 கிலோ வெடிகுண்டுகள், 12 யானைத் தந்தங்கள், 17 தோட்டாக்கள், 10ஆக்சா பிளேடுகள் உள்ளிட்ட பல பொருட்களை அதிரடிப் போலீசார் கைப்பற்றி பங்களாபுதூர் போலீசிடம்ஒப்படைத்தனர்.
செல்வத்தை சத்தியமங்கலம் மாஜிஸ்திரேட்டு முன் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர், செல்வம் 15 நாள் காவலில்கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications