Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிஜி நாட்டின் புதிய பிரதமரானார் குராசே

Subscribe to Oneindia Tamil

சுவா:

14 மாத இடைவெளிக்குப்பின் பிஜியில் ஜனநாயக முறையில் அரசு அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜுலை மாதம் 19ம் தேதி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மகேந்திர சவுத்ரி, பிஜி நாட்டின்பூர்வகுடியைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்பைட் என்பவரின் தலைமையிலான புரட்சி குழுவினரால் பதவியிலிருந்துஇறக்கப்பட்டார்.

சவுத்திரியும் அவரது அமைச்சரவை சகாக்களும் 56 நாட்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர்.அதன் பின் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக ஜார்ஜ் ஸ்பைட்டும் அவரது ஆதரவாளர்கள் 9 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிஜியில் கடந்த வாரம் தேர்தல் நடந்தது. இதில், ஆரம்பத்தில் மகேந்திர சவுத்திரியின் கட்சிவெற்றிமுகத்தில் இருந்து வந்தது. ஆனால் 71 உறுப்பினர்கள் கொண்ட பிஜி நாடாளுமன்றத்தில் ஒருவருக்கும்பெரும்பான்மை கிடைக்கவில்லை,

இந்நிலையில் தற்போதைய பிரதமரான லைசானியா குராசே பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய கட்சி31 இடங்ளில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து குராசே, பிஜி நாட்டின்பிரதமராகப் பதவியேற்றார்.

பிரதமாரக பதவியேற்றபின் அவர் கூறுகையில், "பிரதமர் என்ற முறையில் நான் சிறந்த முறையில் பணியாற்றுவேன்.பிஜியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதே என் நோக்கம்" என்றார்.

கூட்டணி ஆட்சி அமைக்கப்படுமா, அமைச்சரவையில் யாரெல்லாம் இடம் பெறுவார்கள் என்பது குறித்து குராசேஎதுவும் கூறவில்லை. குராசேக்கு பிஜி அதிபர் ஜோஸ்பா இயோலியோ பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+