சென்னையில் மழை நீடிக்கிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் 2வது நாளாக செவ்வாய்க்கிழமை இரவும் மழை பெய்தது.
நகரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலைகள் எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மழை மேலும் ஒரு நாளைக்கு நீடிக்கும் என்றும், இது சாதாரண மழைதான் என்றும் புயல் அபாயம் எதுவும்இல்லை என்றும் வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியிருந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவிலும் நகர் முழுவதிலும் மழை பெய்தது. இருப்பினும் சாதாரணஅளவிலேயே மழை இருந்தது.
புதன்கிழமை காலையிலும் வெயிலைக் காண முடியவில்லை. வானம் மேக மூட்டமாகவே உள்ளது. காலையிலும்மழை பெய்யலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications