Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி-மும்பை விமானத்தில் வெடிகுண்டு புரளி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

டெல்லியிலிருந்து மும்பை செல்லும் விமானத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் மிரட்டல்வந்ததயைடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே அமெரிக்காவில் நடந்த தாக்குதலையடுத்து நாடு முழுவதும் குறிப்பாக அனைத்து விமானநிலையங்களிலும் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந் நிலையிலி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட இருந்த சகாரா ஏர்லைன்ஸ்விமானத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசியில் தகவல் வந்தது.

இதையடுத்து மோப்ப நாய்களுடன் நிபுணர்கள் விமானத்தை நெடு நேரம் முழுவதுமாக சோதனையிட்டனர்.ஆனால், குண்டு ஏதும் கிடைக்கவில்லை.

இருந்தாலும் அந்த விமானம் பறக்க அனுமதிக்கப்படவில்லை. அந்த விமானம் விமான நிலையத்திலிருந்து வெகுதூரத்தில் நிறுத்தப்பட்டது. அதில் பறக்க இருந்த பயணிகள் இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸ்விமானங்கள் மூலம் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

உடனடியாக விசாரணையைத் தொடங்கிய டெல்லி போலீசார் தொலைபேசியில் பேசிய மர்ம நபர் குறித்தஅடையாளத்தை கண்டுபிடித்துவிட்டனர். விரைவில் அவர் பிடிபடுவார் என்று தெரிகிறது.

இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதுமே உயரமான கட்டடங்கள், விமானங்களில் வெடிகுண்டுகள்வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் தொலைபேசிகள் வந்தவண்ணம் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+