டெல்லி-மும்பை விமானத்தில் வெடிகுண்டு புரளி
டெல்லி:
டெல்லியிலிருந்து மும்பை செல்லும் விமானத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் மிரட்டல்வந்ததயைடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந் நிலையிலி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட இருந்த சகாரா ஏர்லைன்ஸ்விமானத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசியில் தகவல் வந்தது.
இதையடுத்து மோப்ப நாய்களுடன் நிபுணர்கள் விமானத்தை நெடு நேரம் முழுவதுமாக சோதனையிட்டனர்.ஆனால், குண்டு ஏதும் கிடைக்கவில்லை.
இருந்தாலும் அந்த விமானம் பறக்க அனுமதிக்கப்படவில்லை. அந்த விமானம் விமான நிலையத்திலிருந்து வெகுதூரத்தில் நிறுத்தப்பட்டது. அதில் பறக்க இருந்த பயணிகள் இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸ்விமானங்கள் மூலம் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உடனடியாக விசாரணையைத் தொடங்கிய டெல்லி போலீசார் தொலைபேசியில் பேசிய மர்ம நபர் குறித்தஅடையாளத்தை கண்டுபிடித்துவிட்டனர். விரைவில் அவர் பிடிபடுவார் என்று தெரிகிறது.
இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதுமே உயரமான கட்டடங்கள், விமானங்களில் வெடிகுண்டுகள்வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் தொலைபேசிகள் வந்தவண்ணம் உள்ளன.












Click it and Unblock the Notifications