For Daily Alerts
Just In
மேயர் தேர்தல்... ஸ்டாலினுக்கு ஆதரவாக திமுகவினர் மனு
சென்னை:
சென்னை நகர மேயர் தேர்தலில் மு.க. ஸ்டாலினுக்கே மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரி ஏராளமானதிமுகவினர் விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளனர்.
திமுக சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. புதன்கிழமைஏராளமான திமுக பிரகர்கள், தற்போதைய மேயர் மு.க. ஸ்டாலினுக்கே மீண்டும் தேர்தலில் டிக்கெட் தர வேண்டும்என்று கோரி விண்ணப்பங்களைத் தாக்கல் செய்தனர்.
இதேபோல, அதிமுக சார்பில் மேயர் தேர்தலில் போட்டியிட கராத்தே தியாகராஜன் விண்ணப்ப மனுத் தாக்கல்செய்தார். ரூ.10,000 கட்டி இந்த மனுவை அவர் தேர்தல் பணிக்குழு தலைவர் செங்கோட்டையனிடம்விண்ணப்பத்தை அவர் கொடுத்தார். அவருடன் ஏராளமான அதிமுக பிரகர்களும் வந்திருந்தனர்.
Comments
Story first published: Thursday, September 13, 2001, 5:30 [IST]