For Daily Alerts
Just In
ஆப்கான் எல்லையில் பாகிஸ்தான் படைகள் குவிப்பு
டெல்லி:
ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தாக்கக் கூடும் என்று கருதும் பாகிஸ்தான், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதி முழுவதும் தன்னுடைய படைகளைக் குவித்து வருகிறது.
இருந்தாலும், ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா விரைவில் தாக்குதல்களை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதி நகரான பலுசிஸ்தானிலும் வடமேற்கு எல்லைப் பகுதிகளிலும்,பாகிஸ்தான் படைகள் குவிய ஆரம்பித்துள்ளன.
பெஷாவர் மற்றும் குவெட்டா போன்ற பகுதிகளில் ஏற்கனவே இருக்கும் ராணுவத்தினரும் முழு கவனத்துடன்இருக்குமாறு உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தலிபான் அரசின் தலைவரான "சுப்ரீம் கமாண்டர்" முல்லா ஒமர், யாரும் தெரியாத இடத்திற்குஅப்புறப்படுத்தப்பட்டுள்ளார் என்று பாகிஸ்தானிய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments
Story first published: Thursday, September 13, 2001, 5:30 [IST]