டெல்லியில் குண்டு வைக்க திட்டம்... 2 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கைது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

டெல்லியில் வெடிகுண்டு வைத்து பெரும் சேதத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருந்த இரண்டு பாகிஸ்தான்தீவிரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லி நியூ பிரண்ட்ஸ் நகரில் புதன்கிழமை இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுஅங்கு இருண்ட பகுதியில் 2 பேர் சந்தேகப்பட்டத்தக்க வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர்மற்றொருவரிடம் ஏதோ ஒரு பொருளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அவர்கள் மேல் சந்தேகம் கொண்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் பெயர் மக்சூத்மற்றும் செய்யது என்பதும் அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களைச் சோதனையிட்டதில், 2 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமருத்து, 1 கையெறிகுண்டு, 2டெட்டனேட்டர்கள் மற்றும் 1 செல் போன் ஆகியவற்றை வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்த போது தெரிய வந்ததாவது:

மக்சூத் கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளார். அவர் காஷ்மீர் குப்வாராமாவட்டத்தில் பல வன்முறைச் சம்பவங்ளில் ஈடுபட்டுள்ளார்.

அவர் டெல்லியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வைத்து பெரும்சேதத்தை விளைவிக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

இதற்காகத்தான் பாகிஸ்தான் கூலிப்படையினரால் டெல்லிக்கு தான் அனுப்பப்பட்டிருந்ததையும் போலீசாரிடம்மக்சூத் தெரிவித்தார். மேலும், இதற்காக 2 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து கொண்டு வந்தது தான்தான் என்றுசெய்யது கூறினார்.

மகசூத் தங்கியிருந்த தாய்மூர் நகர் வீட்டிற்கு சென்று போலீசார் சோதனையிட்டனர். அங்கிருந்து, மேலும் 6 கிலோஆர்.டி.எக்ஸ். வெடி மருந்து கைப்பற்றப்பட்டது.

மக்சூத்துக்கும், செய்யதுக்கும் உதவி செய்த ஆசாத் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+