கருணாநிதி குறித்து சட்டசபையில் விவாதம்... திமுக வெளிநடப்பு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி குறித்து முதல்வர் ஜெயலலிதா மற்றும் நிதியமைச்சர் பொன்னையன் தெரிவித்தகருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை சட்டசபையில் இருந்து வெளிநடப்புச்செய்தனர்.
சர்க்காரியா கமிஷன் திமுக தலைவர் கருணாநிதி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கொடுத்திருந்த அறிக்கை மீதுநடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என்று கருணாநிதி முதல்வராக இருந்தபோது குறிப்பு எழுதி கையெழுத்துப்போட்டிருந்தார்.
நான் ஆட்சிக்கு வந்த பிறகு அந்தக் குறிப்பை ரத்து செய்து உத்தரவிட்டேன். தற்போது குற்றவாளி என்றுசர்க்காரியா கமிஷனால் கூறப்பட்ட கருணாநதி மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
அதற்கு திமுக உறுப்பினர்கள் எழுந்து கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தனர். திமுக உறுப்பினர் துரைமுருகன்எழுந்து, "அப்படிப்பட்ட வழக்குகளை சந்திக்க நாங்கள் தயார் என்றார்.
தொடர்ந்து, சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் உப்பும் இல்லை, சப்பும் இல்லை என்று கூறி இதன் மேல்நடவடிக்கை தேவையில்லை என்று கூறி கையெழுத்துப் போட்டவர் கருணாநிதி இல்லை, எம்.ஜி.ஆர்தான்" என்றார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் பொன்னையன், "வழக்குகளை சந்திக்கப் பயந்து கோழை போல தான் முதல்வராகஇருந்தபோது சர்க்காரியா கமிஷன் அறிக்கையை விசாரிக்கத் தேவையில்லை என்று உத்தரவிட்டார் கருணாநிதி"என்றார்.
இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த திமுக உறுப்பினர்கள், சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல்வெளிநடப்புச் செய்வதாகக் கூறி வெளியேறினர்.












Click it and Unblock the Notifications