வங்கதேச விமானப் படைத் தளங்களை பயன்படுத்த அமெரிக்கா திட்டம்
டாக்கா:
வங்கதேசத்தின் விமானப் படைத் தளங்களையும் கடற்படைத் தளங்களையும் தேவைப்பாட்டால் உபயோகித்துக்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
வங்கதேசத்தின் மீது பறந்து சென்று ஆப்கானிஸ்தான் மீது தாக்க வேண்டிய நிலை வந்தால் அதற்கு அனுமதிக்கவேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
தேவைப்படும்பட்சத்தில் அமெரிக்க போர் விமானங்களுக்கு வங்கதேச விமானப் படைத் தளங்களில் எரிபொருள்நிரப்பித் தர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் இப்போது இடைக்கால அரசு தான் ஆட்சியில் உள்ளது. அமெரிக்காவின் இந்தக் கோரிக்கைகள்குறித்து பரிசீலித்து வருவதாக இந்த அரசின் வெளியுறவு விவகாரங்களுக்கான சிறப்புச் செயலாளர் ஷபி இமாம்கூறியுள்ளார்.
இது குறித்து கடந்த ஆட்சிகளில் வெளியுறவுத்துறை அமைச்சர்களாக இருந்தவர்கள், வெளியுறவுத்துறைசெயலாளர்களுடன் இமாம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆப்கானிஸ்தான் மீதான தனது தாக்குதலில், இஸ்லாமிய தீவிரவாதிகளால் முக்கிய எதிரிகளாகஅறிவிக்கப்பட்டுள்ள இந்தியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் விமானத் தளங்களை முடிந்தவரைஉபயோகப்படுத்துவதைத் தவிர்க்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.