For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உஷார் நிலையில் பாகிஸ்தான் ராணுவம்

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தானை இன்னும் ஓரிரு நாளில் அமெரிக்கா தாக்கவிருப்பதையொட்டி, பாகிஸ்தான் முழுவதும்ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பின் லேடனை ஆப்கானிஸ்தான் அமெரிக்காவிடம் இன்னும் 3 நாட்களில் ஒப்படைக்காவிட்டால், ஆப்கனைநிச்சயம் தாக்குவது என்று அமெரிக்கா காலக்கெடு விதித்திருந்தது.

பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்கக் கோரி, கடைசி முயற்சியாக ஆப்கனுக்கு விரைந்துள்ளனர்பாகிஸ்தான் அதிகாரிகள். அங்கு தலிபான் அரசுக்கும் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கும் இடையே தற்போதுபேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் தன்னுடைய ராணுவத்தை முழு உஷார் நிலையில் வைத்துள்ளது. எல்லைப் பகுதியைநோக்கி எந்த ராணுவத் துருப்பும் செல்லாவிட்டாலும், என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்று கருதும்பாகிஸ்தான் அரசு, நாட்டிலுள்ள அனைத்து ராணுவ நிலைகளையும் தயார் நிலையில் வைத்துள்ளது.

ஆப்கன் எல்லையிலுள்ள தோர்காம் பகுதியில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாகிஸ்தான்-ஆப்கன்எல்லைப் பகுதிகள் இன்னும் மூடப்படவில்லை. இதனால், ஏராளமான ஆப்கன் அகதிகள் இப்பகுதிகள் மூலமாகப்பாகிஸ்தானுக்கு வந்தவண்ணம் உள்ளனர். பல அகதிகளை தலிபான்கள் திருப்பி நாட்டுக்குள் அடித்து விரட்டிவருகின்றனர்.

அமெரிக்காவின் தாக்குதலை ஆப்கனும் முழு அளவில் எதிர்கொள்ளத் தயாராகத்தான் இருக்கிறது. பாகிஸ்தான்எல்லைப் பகுதியில் மெஷின் கன்னுடன் தலிபான் வீரர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் எந்த நாட்டையும் தாக்குவதற்குத் தயங்க மாட்டோம் என்று தலிபான் அரசுஎச்சரித்துள்ளது.

தற்போது அமெரிக்காவிற்கு ஆதரவளித்து வரும் பாகிஸ்தான், இந்த எச்சரிக்கை காரணமாக ஆப்கனின்கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X